/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கோவில் கருவறையில் தீ விபத்து உற்சவர் சிலை, கலசங்கள் சேதம்
/
கோவில் கருவறையில் தீ விபத்து உற்சவர் சிலை, கலசங்கள் சேதம்
கோவில் கருவறையில் தீ விபத்து உற்சவர் சிலை, கலசங்கள் சேதம்
கோவில் கருவறையில் தீ விபத்து உற்சவர் சிலை, கலசங்கள் சேதம்
ADDED : ஆக 25, 2024 02:37 AM
சேத்துப்பட்டு, :திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரத்தில், 500 அடி உயர மலை உச்சியில், 365 படிக்கட்டுகளுடன் பழமையான கனககிரீஸ்வரர் கோவில் மற்றும் அடிவாரத்தில், பெரியநாயகி அம்மன் தனி சன்னிதி உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி நடக்கிறது.
இதனால் விழா காலங்களில் பயன்படுத்தப்படும், 13 உற்சவர் ஐம்பொன் சிலை, பக்தர்கள் வழங்கும் காணிக்கை பொருட்கள், சேலை, நெய், தீப எண்ணெய், மஞ்சள், குங்குமம், விபூதி, யாகசாலைக்கு பயன்படுத்தப்படும் கலசங்கள், யாக சாலை பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
கோவில் குருக்கள், குருபிரசாத் நேற்று காலை கோவில் நடையை திறந்து உள்ளே சென்றபோது, கருவறை மண்டபம் புகைமூட்டமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தேவிகாபுரம் தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர்.
பின்னர் ஆய்வு செய்த போது, கருவறை மண்டப கதவுகள் கருகி காணப்பட்டன. உற்சவர் சிலை, கலசங்களும் சேதமடைந்து உள்ளன.
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, தேவிகாபுரம் போலீசார் தெரிவித்தனர்.

