/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
சரிந்தது குண்டுமல்லி விலை கிலோ ரூ.400க்கு விற்பனை
/
சரிந்தது குண்டுமல்லி விலை கிலோ ரூ.400க்கு விற்பனை
ADDED : மார் 04, 2025 02:17 AM
ப.வேலுார் : நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் பூ உற்பத்தியாளர் சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில், ஒரு கிலோ குண்டு மல்லி, 400 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரம் கிலோ, 600 ரூபாய்க்கு விற்ற நிலையில், இந்த வாரம் கிலோ, 200 ரூபாய் விலை சரிந்துள்ளது.
கடந்த வாரம், 200 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 100 ரூபாய்; 200 ரூபாய்க்கு விற்ற அரளி, 80 ரூபாய்; 200 ரூபாய்க்கு விற்ற சாமந்தி, 120 ரூபாய் என விலை சரிந்ததால், மலர் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'கோடை துவங்கியவுடன் பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும். வரத்து அதிகரித்து, விலை சரிய துவங்கியுள்ளது. வரும் வாரங்களில் விலை மேலும் சரியும்' என்றனர்.
ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டில், ஜனவரியில் ஒரு கிலோ மல்லி, 4,800 ரூபாய் வரை விலை போனது. நேற்று கிலோ, 400 ரூபாயாக சரிந்தது. முல்லை கிலோ, 600, சம்பங்கி, 50, அரளி, 50 ரூபாய்க்கு விலை போனது. ஜனவரியில் பனிப்பொழிவால் வரத்து குறைந்து, 4,800 ரூபாய் வரை மல்லிகை பூ விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.