sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

சரிந்தது குண்டுமல்லி விலை கிலோ ரூ.400க்கு விற்பனை

/

சரிந்தது குண்டுமல்லி விலை கிலோ ரூ.400க்கு விற்பனை

சரிந்தது குண்டுமல்லி விலை கிலோ ரூ.400க்கு விற்பனை

சரிந்தது குண்டுமல்லி விலை கிலோ ரூ.400க்கு விற்பனை


ADDED : மார் 04, 2025 02:17 AM

Google News

ADDED : மார் 04, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார் : நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் பூ உற்பத்தியாளர் சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில், ஒரு கிலோ குண்டு மல்லி, 400 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரம் கிலோ, 600 ரூபாய்க்கு விற்ற நிலையில், இந்த வாரம் கிலோ, 200 ரூபாய் விலை சரிந்துள்ளது.

கடந்த வாரம், 200 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 100 ரூபாய்; 200 ரூபாய்க்கு விற்ற அரளி, 80 ரூபாய்; 200 ரூபாய்க்கு விற்ற சாமந்தி, 120 ரூபாய் என விலை சரிந்ததால், மலர் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

வியாபாரிகள் கூறுகையில், 'கோடை துவங்கியவுடன் பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும். வரத்து அதிகரித்து, விலை சரிய துவங்கியுள்ளது. வரும் வாரங்களில் விலை மேலும் சரியும்' என்றனர்.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டில், ஜனவரியில் ஒரு கிலோ மல்லி, 4,800 ரூபாய் வரை விலை போனது. நேற்று கிலோ, 400 ரூபாயாக சரிந்தது. முல்லை கிலோ, 600, சம்பங்கி, 50, அரளி, 50 ரூபாய்க்கு விலை போனது. ஜனவரியில் பனிப்பொழிவால் வரத்து குறைந்து, 4,800 ரூபாய் வரை மல்லிகை பூ விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us