/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
உணவில் பூரான் 10 மாணவர்கள் மயக்கம்
/
உணவில் பூரான் 10 மாணவர்கள் மயக்கம்
ADDED : நவ 01, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த செங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு நேற்று வழக்கம்போல் மதிய உணவு வழங்கப்பட்டது.
சில மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, உணவில் பூரான் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில், 10 மாணவ - மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள், செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கல்வித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

