sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

பைக் - மினி லாரி மோதல் சம்பவ இடத்தில் 2 பேர் பலி

/

பைக் - மினி லாரி மோதல் சம்பவ இடத்தில் 2 பேர் பலி

பைக் - மினி லாரி மோதல் சம்பவ இடத்தில் 2 பேர் பலி

பைக் - மினி லாரி மோதல் சம்பவ இடத்தில் 2 பேர் பலி


ADDED : செப் 06, 2025 09:08 PM

Google News

ADDED : செப் 06, 2025 09:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சந்தவாசல்:சந்தவாசல் அருகே பைக்கும், மினி லாரியும் மோதியதில், சம்பவ இடத்திலேயே இருவர் பலியாயினர்.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் சந்தவாசல் அருகே கேளூரை சேர்ந்தவர் மணிகண்டன், 35, தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர். இவரது மனைவி மஞ்சுளா, 30. இவருடைய சகோதரி அமுதா, 25.

இவர்கள் மூவரும், 'ஹோண்டா ஷைன்' பைக்கில், ஹெல்மெட் அணியாமல் நேற்று முன்தினம் ஆரணிக்கு சென்று விட்டு, அங்கிருந்து இரவு, 9:30 மணிக்கு கண்ணமங்கலத்துக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, வேலுாரில் இருந்து ஆரணி நோக்கி கொய்யா பழங்களை ஏற்றி சென்ற மினி லாரி, கொங்கராம்பட்டு தொடக்கப்பள்ளி அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே மணிகண்டன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

இதில் மணிகண்டன், அமுதா சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த மஞ்சுளா, வேலுாரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வேன் டிரைவர் மற்றும் கிளீனர் லேசான காயத்துடன் தப்பினர். கண்ணமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மற்றொரு சம்பவம் கந்தர்வக்கோட்டை அருகே, வண்ணாரப்பட்டி பிரிவு சாலையில், மினி லாரி மோதியதில், கணவர் கண் முன் மனைவி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையை சேர்ந்த தரணிதரன், 35; மனைவி புவனேஸ்வரி, 29. கறம்பக்குடியில் உள்ள நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவர், நேற்று, கணவருடன் பைக்கில் புதுக்கோட்டைக்கு சென்றபோது, தஞ்சாவூர் - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், வண்ணாரப்பட்டி பிரிவு சாலை, அருகே பின்னால் வந்த மினி லாரி, பைக் மீது மோதியது.

இதில், துாக்கி வீசப்பட்ட புவனேஸ்வரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தரணிதரன் பலத்த காயமடைந்தார்.

ஆதனக்கோட்டை போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us