sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

டாக்டர் பாலியல் பலாத்காரம்; சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை

/

டாக்டர் பாலியல் பலாத்காரம்; சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை

டாக்டர் பாலியல் பலாத்காரம்; சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை

டாக்டர் பாலியல் பலாத்காரம்; சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை


ADDED : பிப் 19, 2025 06:47 AM

Google News

ADDED : பிப் 19, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: வேலுாரில், பெண் டாக்டர் பாலியல் பலாத்கார வழக்கில், சிறுவனுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

வேலுார், சி.எம்.சி., மருத்துவமனையில் பணிபுரிந்த பீஹாரை சேர்ந்த பெண் டாக்டர் மற்றும் நாக்பூரை சேர்ந்த ஆண் டாக்டர் இருவரும், கடந்த, 2022 மார்ச், 16ல், இரவு, வேலுாரிலிருந்து காட்பாடிக்கு சென்றபோது, 5 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் கடத்தி, பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து, 40,000 ரூபாய், 2 பவுன் நகை, மொபைல்போன் கொள்ளையடித்து சென்றது.

இதில், 17 வயது சிறுவன் உட்பட, 5 பேரை வேலுார் வடக்கு போலீசார் கைது செய்தனர். இதில், 4 பேருக்கு கடந்த, ஜன., 30ல், வேலுார் மகளிர் நீதிமன்றத்தில், 20 ஆண்டு சிறை தண்டனை, தலா, 25,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. சிறுவன் குறித்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார் நேற்று, 17 வயது சிறுவனுக்கு, 20 ஆண்டு சிறை, 23,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us