ADDED : அக் 02, 2025 07:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யாறு; திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆக., 21ல் வாலிபர் ஒருவர் கொலை வழக்கில், 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில், கைதான பெருங்கட்டூர் ரமணா, 23, கதிர்வேல், 21, வேலு, 19, தென்கழனி ஜெகதீசன், 26, விக்னேஷ், 21, ஏனாதவாடி நவீன்குமார், 21, ஆகிய, ஆறு பேர் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சுதாகர், மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜிற்கு பரிந்துரை செய்தார்.
அவர் உத்தரவின்படி, ஆறு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.