sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகள் கைது

/

மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகள் கைது

மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகள் கைது

மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகள் கைது


ADDED : ஜன 05, 2025 09:06 AM

Google News

ADDED : ஜன 05, 2025 09:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணமங்கலம் : திருவண்ணாமலை மாவட்டம் காளசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், 55. இவரது மகன் சீராளன், 30, மகள்கள் ராஜலட்சுமி, 28, ராஜேஸ்வரி, 25. ராஜலட்சுமி, ராஜேஸ்வரி திருமணமாகி, இருவருக்கும் குழந்தை இல்லை.

சீராளன் மனைவி தேவிகலா, 25. கணவர் ராணுவத்தில் பணிபுரியும் நிலையில், தேவிகலா, குழந்தைகளுடன் கோவிந்தம்மாளுடன் வசித்தார். டிச. 10ம் தேதி கோவிந்தமாள் வீட்டில் மயங்கி விழுந்ததாக கூறி, வேலுார் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். சாவில் சந்தேகம் உள்ளதாக, ராஜேஸ்வரி கணவர் முருகன் புகார் அளித்தார்.

போலீசார் கோவிந்தம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதில், கோவிந்தம்மாள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. போலீசார், தேவிகலாவிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

போலீசார் கூறியதாவது: மருமகள் நடத்தையில் கோவிந்தம்மாள் சந்தேகத்துடன் பேசியுள்ளார். ஆத்திரமடைந்த தேவிகலா, கோவிந்தம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தேவிகலாவிடம் விசாரிக்கிறோம். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us