/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கார்த்திகை தீப திருவிழாவில் பயன்படுத்தும் அலங்கார திருக்குடைகள் மாட வீதி உலா
/
கார்த்திகை தீப திருவிழாவில் பயன்படுத்தும் அலங்கார திருக்குடைகள் மாட வீதி உலா
கார்த்திகை தீப திருவிழாவில் பயன்படுத்தும் அலங்கார திருக்குடைகள் மாட வீதி உலா
கார்த்திகை தீப திருவிழாவில் பயன்படுத்தும் அலங்கார திருக்குடைகள் மாட வீதி உலா
ADDED : நவ 24, 2025 06:39 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில் பயன்படுத்தப்படும், 14 அலங்கார திருக்குடைகள் மாடவீதி உலா கொண்டு வரப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று, 24ல் கொடியேற்றத்துடன் தொடங்கி, பத்து நாட்கள் நடக்கும். விழாவில், தினமும் காலை, மாலை, என இரு வேளையும், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் சுவாமி, வெவ்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடக்கும்.
இவ்வாறு வலம் வரும்போது வாகனங்களில் பொருத்தப்படும், திருக்குடைகள், சென்னையை சேர்ந்த ஸ்ரீஅருணாச்சாலா ஆன்மிக பக்தர்கள் சேவா சங்கம் சார்பில், 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 14 திருக்குடைகள் மற்றும் அலங்கார சுருட்டிகள் தயாரித்து, சிவ வாத்தியங் களுடன் நேற்று மாடவீதி வலம் வந்து, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

