/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
துரைமுருகன் மகன் கல்லுாரியில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை
/
துரைமுருகன் மகன் கல்லுாரியில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை
துரைமுருகன் மகன் கல்லுாரியில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை
துரைமுருகன் மகன் கல்லுாரியில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை
ADDED : ஜன 08, 2025 01:41 AM
திருவண்ணாமலை:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டையில், தி.மு.க., அமைச்சர் துரைமுருகன் மகனும், எம்.பி.,யுமான கதிர் ஆனந்திற்கு சொந்தமான, கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரியில், ஜன.,3ம் தேதி காலை 7:00 மணி முதல், அமலாக்கத்துறை அதிகாரிகள் 15க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.
அன்றிரவு, கல்லுாரி பணம் வைக்கும் அறையில் கட்டு கட்டாக பல லட்சக்கணக்கான ரூபாயை கைப்பற்றினர்.
பின், ஜன., 5ம் தேதி அதிகாலை 2:40 மணியுடன், 44 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையை முடித்து புறப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை 7:00 மணி முதல், 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர் மீண்டும் சோதனையை துவக்கி உள்ளனர்.
ஏற்கனவே நடந்த ஆய்வின்போது, ஒரு கம்ப்யூட்டர் ஆன் ஆகாததால், அதை ஆய்வுசெய்ய கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் வாயிலாக ஆய்வு செய்கின்றனர்.