sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

குடிபோதையில் தகராறு விவசாயி அடித்து கொலை

/

குடிபோதையில் தகராறு விவசாயி அடித்து கொலை

குடிபோதையில் தகராறு விவசாயி அடித்து கொலை

குடிபோதையில் தகராறு விவசாயி அடித்து கொலை


ADDED : பிப் 13, 2025 02:21 AM

Google News

ADDED : பிப் 13, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜமுனாமரத்துார்:குடிபோதையில் தகராறு செய்து வந்த விவசாயி அடித்துக் கொல்லப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள புதுாரான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், 40; விவசாயி. இவருக்கும், கல்யாணமந்தை கிராமத்தைச் சேர்ந்த லதா, 38, என்பவருக்கும், 20 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. மகன், 3 மகள்கள் உள்ளனர்.

சங்கர் மதுவுக்கு அடிமையாகி, போதையில் மனைவி, குழந்தைகளை கொடுமைபடுத்தி வந்தார். நேற்று முன்தினம் லதாவிடம், மது போதையில் தகராறு செய்தார். கல்யாணமந்தையில் உள்ள தன் தம்பிகளான பிரபு, 36, செந்தில், 28, அதே ஊரைச் சேர்ந்த உறவினர் ஆனந்தன், 24, ஆகியோரை அழைத்து, சங்கரை லதா தட்டிக்கேட்டார். சங்கர், அவர்களையும் ஆபாசமாக திட்டி தாக்க முயன்றார். இதனால், அவர்கள் பதிலுக்கு தாக்கியதில் சங்கர் உயிரிழந்தார்.

ஜமுனாமரத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us