sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மஹா தீபம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்

/

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மஹா தீபம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மஹா தீபம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மஹா தீபம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்

6


UPDATED : டிச 13, 2024 07:19 PM

ADDED : டிச 13, 2024 06:08 PM

Google News

UPDATED : டிச 13, 2024 07:19 PM ADDED : டிச 13, 2024 06:08 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், இன்று மாலை மஹா தீபம் ஏற்றப்பட்டது. 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன், பல லட்சணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 4ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை, 2:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி கருவறை எதிரில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, சிறப்பு யாக பூஜை நடந்தது. பின்னர், 'ஏகன் அனேகன்' என்ற தத்துவத்தை விளக்கி, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், சுவாமிக்கு ஏற்றப்பட்ட கற்பூர தீபத்திலிருந்து, ஒரு மடக்கில் நெய் தீப விளக்கு ஏற்றப்பட்டு, அதை கொண்டு ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு, அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

பின்னர் பரணி தீபத்தை, கையில் ஏந்தியவாறு எடுத்து சென்று, அம்மன் சன்னதி உள்ளிட்ட கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

பார்வதி அம்மனுக்கு சிவபெருமான் இடபாகம் அளித்ததை நினைவு கூறும் வகையில், அர்த்தநாரீஸ்வரராய் கோவிலினுள் இருந்து மலையை நோக்கி பார்த்தபடி மாலை, 5:59 மணிக்கு வெளிவர காலையில் ஏற்றப்பட்ட பரணி தீப விளக்கிலிருந்து, கோவில் கொடி மரம் எதிரில் உள்ள அகண்ட தீபத்தில், தீபம் ஏற்றப்பட்டு அதிலிருந்து பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து தீப்பந்த ஜோதி ஏற்றப்பட்டு, 2,668 அடி உயர மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும்படி காட்டப்பட்டது. அதே நேரத்தில், மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என, பக்தி பரவச கோஷமிட்டு வழிபட்டனர். திருவண்ணாமலையில் குவிந்த, பல லட்சக்கணக்கான பக்தர்கள், மஹா தீபத்தை தரிசித்து கிரிவலம் சென்றனர். இந்த மஹா தீபம், 11 நாட்கள் எரியும், இவை, 40 கி.மீ., துாரம் வரை தெரியும்.

திருவண்ணாமலை மஹா தீபம் நேரலையை பார்க்க: https://www.dinamalar.com/videos/live-and-recorded/videos/6593






      Dinamalar
      Follow us