sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

தி.மலையில் மார்கழி பவுர்ணமி கிரிவலம்

/

தி.மலையில் மார்கழி பவுர்ணமி கிரிவலம்

தி.மலையில் மார்கழி பவுர்ணமி கிரிவலம்

தி.மலையில் மார்கழி பவுர்ணமி கிரிவலம்


ADDED : ஜன 14, 2025 05:39 AM

Google News

ADDED : ஜன 14, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கானோரும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், சிவனாக நினைத்து வழிபடும் அண்ணாமலையார் மலையை வலம் வந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

அதன்படி, மார்கழி மாத பவுர்ணமி திதி நேற்று அதிகாலை, 5:29 முதல், இன்று, 14ம் தேதி அதிகாலை, 4:46 மணி வரை உள்ளதால், இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையால், பல்வேறு பகுதிகளிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோவிலில், 5 மணி நேரம் காத்திருந்து, அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us