sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மாயமான கள்ளக்காதல் ஜோடி சடலம்: அழுகிய நிலையில் ஏரியில் மீட்பு

/

மாயமான கள்ளக்காதல் ஜோடி சடலம்: அழுகிய நிலையில் ஏரியில் மீட்பு

மாயமான கள்ளக்காதல் ஜோடி சடலம்: அழுகிய நிலையில் ஏரியில் மீட்பு

மாயமான கள்ளக்காதல் ஜோடி சடலம்: அழுகிய நிலையில் ஏரியில் மீட்பு


ADDED : ஏப் 30, 2025 01:03 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலசப்பாக்கம்:

கலசப்பாக்கம் அருகே, 3 மாதங்களுக்கு முன்பு, மாயமான கள்ளக்காதல் ஜோடி சடலம் அழுகிய நிலையில் ஏரியில் மீட்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் அடுத்த நார்த்தாம்பூண்டி ஏரி, கடும் வெயிலால் வற்றி தண்ணீர் குறைவாக உள்ளதால், ஏரியில் மீன் பிடிக்க, அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் மாலை சென்றனர். அப்போது அழுகிய நிலையில், 2 சடலங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடம் சென்று, கலசப்பாக்கம் தீயணைப்பு துறையினர் உதவியோடு, அழுகிய நிலையில் எலும்புக்கூடாக இருந்த, 2 சடலத்தையும் மீட்டு விசாரணை

நடத்தினர்.

இதில், நார்த்தாம்பூண்டியை சேர்ந்தவர் கீதா, 40. இவருக்கு, உறவினரான வட புழுதியூர் முருகன், 43, என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு, கடந்த, 3 மாதங்களுக்கு முன், இருவரும் மாயமானது தெரிந்தது. ஏரியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அவர்களது தான் என, ஆடைகளை வைத்து உறுதி செய்யப்பட்டது. இறந்த கீதாவின் கணவர் பச்சையப்பன். இவர்களுக்கு பவானி, 17, மோனிகா, 15, என இரு மகள்களும், மணிகண்டன், 14, என்ற மகனும் உள்ளார். இறந்த முருகனுக்கு ராதா என்ற மனைவியும், லோகேஷ்வரி, 14, தர்ஷினி, 12, ஜனனி, 10, என, 3 மகள்களும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us