sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

'அரசியல் கட்சி கூட்டங்களின் போது கடைகளை மூட சொல்லக்கூடாது'

/

'அரசியல் கட்சி கூட்டங்களின் போது கடைகளை மூட சொல்லக்கூடாது'

'அரசியல் கட்சி கூட்டங்களின் போது கடைகளை மூட சொல்லக்கூடாது'

'அரசியல் கட்சி கூட்டங்களின் போது கடைகளை மூட சொல்லக்கூடாது'


ADDED : ஜூன் 16, 2025 03:22 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மலை: ''அரசியல் கட்சிகள் மாநாடு மற்றும் கூட்டங்கள் நடத்தும் போது, அப்பகுதி கடைகளை மூட கூறும் நிலைப்பாட்டை திரும்ப பெற வேண்டும்,'' என, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கூறினார்.

திருவண்ணாமலையில் திருமண நிகழ்வில் பங்கேற்க வந்தவர், நிருபர்களிடம் கூறியதாவது:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு வரும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் அறநிலையத்துறையினர், உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்களை நிறுத்த இடம் தேர்வு செய்து தர வேண்டும். அரசியல் கட்சிகள் மாநாடு, கூட்டங்கள் நடத்தும்போது, அப்பகுதி கடைகளை மூட சொல்லும் நிலைப்பாட்டினை திரும்ப பெற வேண்டும்.

தமிழக முதல்வர், 24 மணி நேரமும் கடை திறக்கலாம் என கூறியுள்ள நிலையில், போலீசார், இரவு, 11:00 மணிக்குள் கடையை பூட்ட கூறுகின்றனர். இது, மாவட்டம் வாரியாக நேரம் வேறுபடுகிறது. இதை ஏற்க முடியாது. போலீசார் கடையை மூட கூறுவதை விட்டு விட்டு, பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us