sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மலையில் உருண்டு நிற்கும் பாறையை உடைக்கும் பணி

/

மலையில் உருண்டு நிற்கும் பாறையை உடைக்கும் பணி

மலையில் உருண்டு நிற்கும் பாறையை உடைக்கும் பணி

மலையில் உருண்டு நிற்கும் பாறையை உடைக்கும் பணி


ADDED : ஜன 23, 2025 01:13 AM

Google News

ADDED : ஜன 23, 2025 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலையில் கடந்த டிச., 1ல், ஏற்பட்ட நிலச்சரிவில் மலையிலிருந்து உருண்டு, அந்தரத்தில் நிற்கும், 40 டன் பாறையை உடைக்கும் பணியில், நிபுணர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலையடிவாரத்தில், 25,000க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. 'பெஞ்சல்' புயல், மழையால், திருவண்ணாமலையில் கடந்த, டிச., 1ம் தேதி அண்ணாமலையார் மலையில், ஆறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஏழு பேர் பலியாகினர்; 20 வீடுகள் சேதமடைந்தன.

அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில், 40 டன் பாறை, மலையிலிருந்து உருண்டு, வ.உ.சி., நகர், 9வது தெரு, மலையடிவாரத்தில், எந்த நேரத்திலும் உருண்டு, வீடுகளின் மீது விழும் அபாய நிலையில், குறைவான பிடிமானத்துடன், அந்தரத்தில் தொங்கிக் கொண்டுள்ளது. அதை உடைத்து அப்புறப்படுத்தும் பணியில், திருச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பாறை உடைக்கும் நிபுணர் குழுவினர் 10 பேர் ஈடுபட்டுள்ளனர்.

பாறையில் ஆங்காங்கே துளையிட்டு, வெடிபொருள் நிரப்பி, அதிகளவு சிதறாமல் வெடிக்கும் முறையில், பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சில பாறைகள் மலையிலிருந்து உருண்டு வரும் அபாய நிலையில் உள்ளன. அவற்றையும் உடைக்கும் பணியை செய்ய உள்ளனர்.






      Dinamalar
      Follow us