/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
தி.மு.க., -- எம்.பி., மகன் கார் கண்ணாடி உடைப்பு?
/
தி.மு.க., -- எம்.பி., மகன் கார் கண்ணாடி உடைப்பு?
ADDED : பிப் 27, 2025 01:52 AM
திருச்சி, பிப். 27-
திருச்சியில், தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவாவின் மகன் சூர்யா வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி வயலுார் ரோட்டில் உள்ள சண்முகா நகரில் வசிப்பவர், சூர்யா, 38. இவர், தி.மு.க.,வின் ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவாவின் மகன். குடும்ப பிரச்னையால் தனியே வசிக்கிறார். பா.ஜ.,வில் இருந்த சூர்யா, பல சர்ச்சைகளில் சிக்கி, கட்சியில் இருந்து விலகியுள்ளார். பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்பட, அக்கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பேசி வந்தார்.
இந்நிலையில், சண்முகா நகரில் உள்ள தான் வசிக்கும் வீட்டின் முன், 'இன்னவோ' காரை நிறுத்தியிருந்தார். காரின் பின் பக்க கண்ணாடி நேற்று காலை விரிசல் விட்டிருந்தது. கண்ணாடியை தனது எதிரிகள் தான் உடைத்து விட்டனர் என்று நினைத்த சூர்யா, இதுகுறித்து சோமரசம் பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
தடயவியல் வல்லுனர்கள் சோதனையில், கார் கண்ணாடி உடைக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என, போலீசார் தெரிவித்தனர். எனினும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து, விசாரிக்கின்றனர்.
===================