sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

ஆனி மாதத்தின் கடைசி பிரதோஷம் சிவன், விஷ்ணு கோவிலில் வழிபாடு

/

ஆனி மாதத்தின் கடைசி பிரதோஷம் சிவன், விஷ்ணு கோவிலில் வழிபாடு

ஆனி மாதத்தின் கடைசி பிரதோஷம் சிவன், விஷ்ணு கோவிலில் வழிபாடு

ஆனி மாதத்தின் கடைசி பிரதோஷம் சிவன், விஷ்ணு கோவிலில் வழிபாடு


ADDED : ஜூலை 13, 2011 02:21 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: ஆனி மாதத்தின் கடைசி பிரதோஷத்தையொட்டி, திருச்சியில் உள்ள சிவன், விஷ்ணு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.சிவன், விஷ்ணு, முருகன் என அனைத்து தெய்வங்களுக்கும், ஆனி மாதத்தில் செய்யப்படும் திருமஞ்சனம் சிறப்பு வாய்ந்தது.

திருமஞ்சன நாளில், வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகைய சிறப்புமிக்க ஆனி மாதத்தின் கடைசி பிரதோஷ விழா திருச்சியில் நேற்று சீரும், சிறப்புமாக கொண்டாடப்பட்டது. திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் கோவில், ராமர்குளம் கரியமாலீஸ்வரர் கோவில், உத்தமர்கோவில், மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவில், உறையூர் பஞ்சவர்ண ஸ்வாமி கோவில், இ.பி., சாலை பூலோகநாத ஸ்வாமி கோவில் உள்ளிட்ட அனைத்து சிவ ஸ்தங்களும் நந்தியம்பெருமான் மற்றும் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபராதனைகள் நடந்தன. பின்னர், ரிஷப வாகனத்தில் அம்மனுடன் சிவன் எழுந்தருளி, திருவீதியுலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். விஷ்ணுக்கும் உகந்தது: பிரதோஷ நேரத்தில் அவதரித்ததால், பிரதோஷ காலம் நரசிம்மருக்கு உகந்தது. பிரதோஷ காலத்தில் வைணவர்கள், ஸ்ரீரங்கம் மேட்டழகிய சிங்கர், காட்டழகிய சிங்கர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.








      Dinamalar
      Follow us