sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

லாரி மோதிய விபத்து மற்றொரு பெண் பலி

/

லாரி மோதிய விபத்து மற்றொரு பெண் பலி

லாரி மோதிய விபத்து மற்றொரு பெண் பலி

லாரி மோதிய விபத்து மற்றொரு பெண் பலி


ADDED : ஜூலை 12, 2011 12:20 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணப்பாறை: திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகேயுள்ள சக்கம்பட்டியைச் சேர்ந்த சின்னக்காளை மனைவி புஷ்பம்(42), மகன் கோபால், உறவினர் பொன்னம்மாள்(43) ஆகிய மூவரும் நேற்று முன்தினம் காலை 10ம் தேதி வத்தமணியாரம் பட்டியில் உள்ள தங்களது உறவினர் திருமணத்தில் கலந்து கொண்டனர். பின் நடுப்பட்டிக்கு மூவரும் காலை 10.30 மணிக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல்லிலிருந்து இனாம்குளத்திற்கு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி நடந்து சென்றவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் புஷ்பம் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த பொன்னம்மாள், கோபால் இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பொன்னம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இவ்விபத்தில் தற்போது சிகிச்சை பெற்று வந்த பொன்னம்மாளும் இறந்ததால் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us