sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

அக்கா வீட்டுக்கு "தீ'வைப்பு: தம்பி கைது

/

அக்கா வீட்டுக்கு "தீ'வைப்பு: தம்பி கைது

அக்கா வீட்டுக்கு "தீ'வைப்பு: தம்பி கைது

அக்கா வீட்டுக்கு "தீ'வைப்பு: தம்பி கைது


ADDED : ஜூலை 17, 2011 01:02 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணப்பாறை: மணப்பாறை அருகே புது அடைக்கம்பட்டியைச் சேர்ந்தவர் வள்ளி தெய்வானை(32).

கருத்துவேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து தனது மகள் மற்றும் தாயுடன் குடிசை வீட்டில் வசிக்கிறார். இவரது தம்பி வடிவேல்(30) வள்ளிதெய்வானை வீட்டிற்கு அருகிலேயே மற்றொரு குடிசை வீட்டில் வசித்து வரும் இவர் தினமும் குடித்துவிட்டு அக்காவுடன் தகராறு செய்வது வழக்கம்.நேற்று முன்தினம் இரவு ஏழு மணிக்கு வழக்கம்போல் போதையுடன் வந்த வடிவேல், அக்கா வள்ளி தெய்வானையுடன் தகராறு செய்ததுடன் அவரது வீட்டிற்கு தீவைத்துள்ளார். காற்றில் தீ மளமளவென வடிவேல் வீட்டிற்கும் பரவி அவரது வீடும் எரிந்தது. மணப்பாறை தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் வீடு முற்றிலும் எரிந்தது.இதில் வள்ளிதெய்வானை வீட்டில் இருந்த இரண்டு பவுன் நகை உட்பட அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்தது. புத்தாநத்தம் எஸ்.ஐ.,க்கள் ராஜு, வெள்ளைச்சாமி சம்பவ இடம் வந்து விசாரணை செய்து வடிவேலுவை கைது செய்தனர். தாசில்தார் விஜயலட்சுமி உத்தரவின் பேரில், ஆர்.ஐ., நாச்சியார், வி.ஏ.ஓ., மனோகர் ஆகியோர் அரசு உதவித்தொகை 5,000 ரூபாய் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினர்.






      Dinamalar
      Follow us