ADDED : ஏப் 29, 2026 06:27 AM
அ நிறம் | அளவு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொப்பம்பட்டியை சேர்ந்த குப்புசாமி மகன் செந்தில்குமார், 35. கூலித்தொழிலாளியான இவர், கடந்த, 26 இரவு, 7:00 மணிக்கு தம்மம்பட்டியில் இருந்து கொண்டையம்பள்ளிக்கு, 'ஸ்பிளண்டர்' பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்து கொண்டிருந்தார். கொண்டையம்பள்ளி சாலை வளைவில் வேகமாக திரும்பியபோது, தடுமாறி விழுந்த அவர், படுகாயமடைந்தார்.
பின் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
