sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

கோவிலின் 12 டன் மரங்களை கடத்த முயன்ற 4 பேர் சிக்கினர்

/

கோவிலின் 12 டன் மரங்களை கடத்த முயன்ற 4 பேர் சிக்கினர்

கோவிலின் 12 டன் மரங்களை கடத்த முயன்ற 4 பேர் சிக்கினர்

கோவிலின் 12 டன் மரங்களை கடத்த முயன்ற 4 பேர் சிக்கினர்


ADDED : மார் 02, 2025 01:46 AM

Google News

ADDED : மார் 02, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: கோவில் நிலத்தில் இருந்த 12 டன் மரங்களை வெட்டி கடத்த முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி அருகே, உன்னியூர் கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம், பெரியபள்ளிபாளையத்தில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தில், வேம்பு மற்றும் சீமைக்கருவேல மரங்கள் உள்ளன. மர்ம நபர்கள், அந்த மரங்களை வெட்டிக் கடத்துவதாக, அறநிலையத்துறை ஆய்வாளர் மலர்விழிக்கு தகவல் கிடைத்தது.

தொட்டியம் போலீசார் மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மாணிக்கவாசகம், ஆய்வாளர் மலர்விழி ஆகியோர் சென்று பார்த்தபோது, அங்கு மரங்களை வெட்டி, லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.

கரூர் மாவட்டம், கழுவூரைச் சேர்ந்த சுப்ரமணி, 34, சின்ன கவுண்டம்பட்டியைச் சேர்ந்த சிவசாமி, 39, நாமக்கல் மாவட்டம், குமரிபாளையத்தைச் சேர்ந்த ராமசாமி, 38, மூங்கில்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி, 40, ஆகியோர் 12 டன் மரங்களை வெட்டி, லாரியில் கடத்த முயன்றது தெரிய வந்தது.

காட்டுப்புத்துார் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து, வெட்டப்பட்ட மரங்கள், பொக்லைன் இயந்திரம், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us