sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

ரூ.15 லட்சம் மோசடி செய்த அரசு அதிகாரி மீது வழக்கு

/

ரூ.15 லட்சம் மோசடி செய்த அரசு அதிகாரி மீது வழக்கு

ரூ.15 லட்சம் மோசடி செய்த அரசு அதிகாரி மீது வழக்கு

ரூ.15 லட்சம் மோசடி செய்த அரசு அதிகாரி மீது வழக்கு


ADDED : மே 01, 2024 01:40 AM

Google News

ADDED : மே 01, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே, திருவெள்ளறை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 57. இவர், 2019ல் ஒரு திருமண நிகழ்வில், பெரம்பலுார் மாவட்டம், சிறுவயலுார் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவரைசந்தித்தார்.

சென்னை, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருவதாக கூறிய அவர், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, சண்முகத்திடம், 15 லட்சம் ரூபாய் பெற்றார்.

அதன் பின், வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் மணிவண்ணன் ஏமாற்றினார். இதனால், திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், சணமுகம் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி, மண்ணச்சநல்லுார் போலீசார், மணிவண்ணனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us