sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

கவரிங் நகை அடகு மோசடி ஆட்டோ டிரைவர்கள் கைது

/

கவரிங் நகை அடகு மோசடி ஆட்டோ டிரைவர்கள் கைது

கவரிங் நகை அடகு மோசடி ஆட்டோ டிரைவர்கள் கைது

கவரிங் நகை அடகு மோசடி ஆட்டோ டிரைவர்கள் கைது


ADDED : செப் 13, 2024 01:58 AM

Google News

ADDED : செப் 13, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி, பாலக்கரை மல்லிகைபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சரவணன், 37, ராம்குமார், 32, டேவிட், 35. இவர்கள் மூவரும் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் நகைகளை அடகு வைத்து கடந்த சில மாதமாக பணம் பெற்றனர். அவை போலி என சமீபத்தில் தெரியவந்தது.

இதுகுறித்து, அந்தந்த நிதி நிதிறுவனங்கள் சார்பில், பாலக்கரை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆட்டோ டிரைவர்கள் சரவணன், ராம்குமார், டேவிட் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

தங்கமுலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை, அசல் தங்க நகைககள் போல, சென்னையைச் சேர்ந்த கும்பல் தயாரித்துக் கொடுக்கிறது. அவர்களிடம் மிகக்குறைந்த விலைக்கு அந்த நகைகளை வாங்கி, அவற்றை அடகு வைத்து, மூவரும், 30 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பொதுத்துறை வங்கியான 'யூகோ' வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடியில் ஈடுபட்ட முகமது ஹபீஸ், நகை மதிப்பீட்டாளர்கள் சந்திரசேகரன், வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள இரண்டு பெண்கள் உட்பட, மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us