sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

போலீஸ் கண்காணிப்பு அறை தீப்பிடித்து எரிந்தது எப்படி?

/

போலீஸ் கண்காணிப்பு அறை தீப்பிடித்து எரிந்தது எப்படி?

போலீஸ் கண்காணிப்பு அறை தீப்பிடித்து எரிந்தது எப்படி?

போலீஸ் கண்காணிப்பு அறை தீப்பிடித்து எரிந்தது எப்படி?


ADDED : பிப் 23, 2025 01:24 AM

Google News

ADDED : பிப் 23, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி, நம்பர் ஒன் டோல்கேட் அருகே போலீசாரின் கண்காணிப்பு அறை தீப்பற்றி எரிந்ததால், மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமாகின.

திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில், திருச்சி, சென்னை, சேலம், அரியலுார் நகரங்களுக்கு செல்லும் பிரதான சாலைகள் இணைகின்றன. இங்குள்ள ரவுண்டானா பகுதியில், வாகன விபத்துகள் மற்றும் குற்ற சம்பவங்களை கண்காணிப்பதற்காக, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி உள்ளனர். சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறையில், நேற்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. ரவுண்டானா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தீயை அணைக்க முயன்றனர்.

இருப்பினும், கண்காணிப்பு அறையில் பொருத்தி இருந்த எல்.இ.டி., 'டிவி' மற்றும் சிசிடிவி கேமரா சாதனங்கள் உட்பட மின்சாதன பொருட்கள் தீயில் கருகின. கண்காணிப்பு அறையில் இருந்த மின்சாதனங்களில் மின்கசிவு ஏற்பட்டு, தீ பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us