sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

கோவில் நிகழ்ச்சிக்கு செல்லாத அமைச்சர் மகேஷ்; நன்கொடையை திருப்பிக் கொடுத்த கிராம மக்கள்

/

கோவில் நிகழ்ச்சிக்கு செல்லாத அமைச்சர் மகேஷ்; நன்கொடையை திருப்பிக் கொடுத்த கிராம மக்கள்

கோவில் நிகழ்ச்சிக்கு செல்லாத அமைச்சர் மகேஷ்; நன்கொடையை திருப்பிக் கொடுத்த கிராம மக்கள்

கோவில் நிகழ்ச்சிக்கு செல்லாத அமைச்சர் மகேஷ்; நன்கொடையை திருப்பிக் கொடுத்த கிராம மக்கள்

7


UPDATED : ஆக 01, 2024 04:46 AM

ADDED : ஜூலை 31, 2024 09:39 PM

Google News

UPDATED : ஆக 01, 2024 04:46 AM ADDED : ஜூலை 31, 2024 09:39 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள டி.இடையப்பட்டியில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம், கடந்த ஜூன் 12ல் நடந்தது. முன்னதாக, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு கிராம மக்களும், தி.மு.க.,வினரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷுக்கு அழைப்பு விடுத்தனர்.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலராக மகேஷ் உள்ளார். இந்தப் பகுதியில் தான் சம்பந்தப்பட்ட முருகன் கோவில் அமைந்துள்ளது. அதனால், முருகன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு அழைப்பு விடுத்ததும், கண்டிப்பாக வருவதாக ஒப்புக் கொண்டார் அமைச்சர்.

ஆனால், ஒப்புக் கொண்டபடி கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. ஆனாலும், 10,000 ரூபாயை கோவிலுக்கு நன்கொடையாக அளித்தார்.

டி.இடையப்பட்டி பகுதியில் இருக்கும் தி.மு.க.,வினர் சிலர், 'என்னண்ணே கோவில் நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்த்துட்டீங்களே...' என கேட்க, 'இன்னொரு நாளில் கட்டாயம் வருவேன்' என்று சொல்லி அனுப்பியுள்ளார் மகேஷ்.

இந்நிலையில், 'ஜூலை 28ல், மருங்காபுரி பகுதிக்கு அமைச்சர் மகேஷ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, டி.இடையப்பட்டியில் இருக்கும் முருகன் கோவிலுக்கு அமைச்சர் மகேஷ் வருவார்' என்று, அந்தப் பகுதி தி.மு.க., ஒன்றிய செயலரும், மருங்காபுரி யூனியன் சேர்மனுமான பழனியாண்டியிடம் அமைச்சர் தரப்பில் கூறியுள்ளனர்.

இதையடுத்து, கடந்த ஜூலை 28ல், பூரண கும்பம், ஆளுயர மாலை, பூஜை செய்த பிரசாதம், சால்வைகள் உள்ளிட்டவைகளோடு, அமைச்சர் வருகைக்காக லோக்கல் தி.மு.க.,வினரும், கிராமத்தினரும், முருக பக்தர்களும் திரளாக கோவில் முன் கூடியிருந்தனர்.

மருங்காபுரி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் மகேஷ், இரவு 9:00 மணி வரை கோவிலுக்கு வரவில்லை. இதனால், கோபம் அடைந்த கிராமத்தினர், மக்களையும் கோவிலையும் அவமதித்து விட்டதாக கொந்தளித்து இருந்துள்ளனர்.

கூடவே, அமைச்சருக்காக வாங்கி வைத்திருந்த மாலை, பிரசாதம், சால்வைகள் உள்ளிட்டவைகளோடு, அமைச்சர் கோவிலுக்குக் கொடுத்த நன்கொடை, 10,000 ரூபாயுடன் கூடுதலாக 100 ரூபாய் சேர்த்து, 'அமைச்சரிடமே கொடுத்து விடுங்கள்' எனச் சொல்லி யூனியன் சேர்மன் பழனியாண்டியிடம் அனைத்தையும் கொடுத்து விட்டனர்.

இதனால், பதற்றம் அடைந்திருக்கும் அமைச்சர் ஆதரவாளர்கள், டி.இடையப்பட்டி கிராம மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருப்பதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us