sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

ஒதுக்கி வைத்த மசூதி நிர்வாகம் முஸ்லிம் குடும்பத்தினர் தர்ணா

/

ஒதுக்கி வைத்த மசூதி நிர்வாகம் முஸ்லிம் குடும்பத்தினர் தர்ணா

ஒதுக்கி வைத்த மசூதி நிர்வாகம் முஸ்லிம் குடும்பத்தினர் தர்ணா

ஒதுக்கி வைத்த மசூதி நிர்வாகம் முஸ்லிம் குடும்பத்தினர் தர்ணா


ADDED : மார் 08, 2025 01:05 AM

Google News

ADDED : மார் 08, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சியில், 10 முஸ்லிம் குடும்பங்களை ஒதுக்கி வைத்ததாக புகார் கூறி, வக்பு அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.

திருச்சி, அரியமங்கலம் அருகே உள்ள உக்கடையில் உள்ள கலீபா மசூதிக்கு சொந்தமான இடத்தில் குடியிருக்கும் 10 முஸ்லிம் குடும்பங்களை, பல்வேறு காரணங்களுக்காக, 2019ம் ஆண்டு முதல் மசூதி நிர்வாகம் ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அந்த குடும்பத்தினர் வக்பு வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மாவட்ட வக்பு வாரிய ஆய்வாளர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட 10 முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசாரும், வக்பு அலுவலக அதிகாரிகளும் பேச்சு நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக வக்பு அலுவலக அதிகாரிகள் கூறியதால், போராட்டம்கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us