sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

பஸ்சில் தவறிய 10 சவரன் மீட்பு

/

பஸ்சில் தவறிய 10 சவரன் மீட்பு

பஸ்சில் தவறிய 10 சவரன் மீட்பு

பஸ்சில் தவறிய 10 சவரன் மீட்பு


ADDED : மே 07, 2024 10:20 PM

Google News

ADDED : மே 07, 2024 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:பெரம்பலுார் சாமியப்ப நகரைச் சேர்ந்த மதீனாபீ என்ற பெண், தாய் மற்றும் பாட்டி ஆகியோருடன், 4ம் தேதி சென்னை மாதவரத்தில் இருந்து பெரம்பலுார் வந்தார்.

நெக்லஸ், தோடு, மோதிரம், பிரேஸ்லெட் என 81 கிராம் தங்க நகைகளையும், வெள்ளிக் கொலுசு, மோதிரம் என 149 கிராம் வெள்ளி நகைகளையும் பஸ்சில் தவற விட்டார்.

வீட்டுக்குச் சென்றதும் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த மதீனாபீ, பஸ்சில் பயணம் செய்த டிக்கெட்டை காண்பித்து, பெரம்பலுார் பஸ் ஸ்டாண்டில் உள்ள போக்குவரத்துக் கழக பணியாளர்களிடம் விசாரித்தார்.

டிரைவர் ரமேஷ், கண்டக்டர் கோபாலன் ஆகியோர் பஸ்சில் கிடந்த நகைகளை, டிப்போவில் ஒப்படைத்த தகவல் தெரிந்தது. திருச்சி புறநகர் கிளைக்கு சென்றார். போக்குவரத்துக் கழக அதிகாரிகள், போலீஸ் முன்னிலையில், நகைகளை, மதீனாவிடம் ஒப்படைத்தனர். டிரைவர், கண்டக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us