sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

திருச்சி எஸ்.பி.,க்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

/

திருச்சி எஸ்.பி.,க்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

திருச்சி எஸ்.பி.,க்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

திருச்சி எஸ்.பி.,க்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : ஜூலை 31, 2024 12:45 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி, 20 நாட்களுக்கு முன், புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே தைலமரக்காட்டில் நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இறந்த துரைசாமியின் ஆதரவாளர்கள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எம்.ஜி.ஆர்., நகர் என்ற பெயரில் முகவரி உருவாக்கினர்.

அதில், திருச்சி எஸ்.பி., வருண்குமாரின் படத்தை பதிவிட்டு, திருச்சியில் சிந்தித்து பார்க்க முடியாத அளவுக்கு தலைகள் சிதறும் என, பதிவிட்டிருந்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பதிவை, திருச்சி, புத்துார் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த ராஜபாண்டி, 24, பதிவேற்றம் செய்தது தெரிய வந்தது.

அவரை பிடிக்க, சோமரசம்பேட்டை போலீசார் சென்றபோது, கையில் வைத்திருந்த பட்டா கத்தியால் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார், நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே, கொம்பன் ஜெகன் என்ற ரவுடி என்கவுன்டரில் கொல்லப்பட்ட போதும், திருச்சி எஸ்.பி., வருண்குமாருக்கு இதேபோன்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us