ADDED : பிப் 27, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடி ஒருவர் உடல்நலக் குறைவால், திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இவருக்கான பாதுகாப்பு பணியில், பெரம்பலுார் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் இளம்ராஜா, 36, என்ற போலீஸ்காரர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மருத்துவமனையில் பயிற்சி நர்சாக பணியாற்றிய, 17 வயது மாணவியிடம், இளம்ராஜா பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து மாணவி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில், போலீசார் போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.

