sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

அட்வான்சாக கிளம்பிய விமானம் திருச்சியில் 20 பயணியர் தவிப்பு

/

அட்வான்சாக கிளம்பிய விமானம் திருச்சியில் 20 பயணியர் தவிப்பு

அட்வான்சாக கிளம்பிய விமானம் திருச்சியில் 20 பயணியர் தவிப்பு

அட்வான்சாக கிளம்பிய விமானம் திருச்சியில் 20 பயணியர் தவிப்பு


ADDED : செப் 26, 2024 03:00 AM

Google News

ADDED : செப் 26, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி,:திருச்சியில் இருந்து நேற்று மாலை 4.20 மணிக்கு, சிங்கப்பூர் செல்ல வேண்டிய 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானத்தில் பயணிக்க, 180 பயணியர் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், நேற்று அந்த விமானம் 3:00 மணிக்கே புறப்பட்டு சென்று விட்டது. முன்னதாக கிளம்புவது குறித்து பயணியருக்கு தகவல் அனுப்பி உள்ளனர். அதன்படி, 160 பயணியர் உரிய நேரத்துக்கு வந்து விட்டனர்.

ஆனால், 20 பயணியர் தாமதமாக வந்து, விமானத்தை தவற விட்டனர். விமானம் சென்று விட்டதை அறிந்த அவர்கள், விமான நிலையத்தில் இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி, இன்று மதியம் செல்லும் விமானத்தில் சிங்கப்பூர் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தனர். இதனால் பயணியர் அமைதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us