sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

பள்ளிக்கல்வி நிதி முறைகேடு கல்வித்துறையினர் மீது வழக்கு

/

பள்ளிக்கல்வி நிதி முறைகேடு கல்வித்துறையினர் மீது வழக்கு

பள்ளிக்கல்வி நிதி முறைகேடு கல்வித்துறையினர் மீது வழக்கு

பள்ளிக்கல்வி நிதி முறைகேடு கல்வித்துறையினர் மீது வழக்கு


ADDED : பிப் 16, 2024 01:49 AM

Google News

ADDED : பிப் 16, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் மேம்பாட்டு பணிகளுக்காக 2019 முதல் 2021ம் ஆண்டு வரை, மூன்று கட்டமாக, 1.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டு, இந்த நிதியில் இருந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கொப்பம்பட்டி ஆதிதிராவிடர் நலப்பள்ளிக்கு தலா எட்டு லட்சம் ரூபாயில், மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுவுக்கு விடுவிக்கப்பட்டது.

அதுபோல, 2021ம் ஆண்டுகளில், 13 அரசு பள்ளிகளுக்கு தேவையான தளவாட பொருட்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு 62.23 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், 'டெண்டர்' முறை பின்பற்றப்படவில்லை; அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

இந்த முறைகேடு குறித்து கடந்த 5ம் தேதி, திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் விசாரணை நடத்தி, பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

திருச்சி மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அதிகாரியாகவும், மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த அறிவழகன் உள்ளிட்ட ஒன்பது கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது, நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us