sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

மதுவுக்கு அடிமையான மாணவர் மூவர் மாயம்

/

மதுவுக்கு அடிமையான மாணவர் மூவர் மாயம்

மதுவுக்கு அடிமையான மாணவர் மூவர் மாயம்

மதுவுக்கு அடிமையான மாணவர் மூவர் மாயம்


ADDED : நவ 09, 2024 01:02 AM

Google News

ADDED : நவ 09, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி, நவ. 9-

திருச்சி தெப்பக்குளம் பகுதியில், பிஷப்ஹீபர் அரசு உதவிபெறும் பள்ளி செயல்படுகிறது. மிகவும் பழமையான இந்த பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும், மூன்று மாணவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர்களில் ஒரு மாணவருக்கு, மது பழக்கத்தில் இருந்து விடுதலை அளிக்கும் போதை மறுவாழ்வு மையத்தில் வைத்து, அவரது குடும்பத்தினர் சிகிச்சை அளித்துள்ளனர். அதன் பின், தீபாவளி விடுமுறைக்கு பின், அந்த மாணவர் பள்ளிக்கு மீண்டும் சென்றார்.

கடந்த, 6ம் தேதி இரவு, இரண்டு மாணவர்களுடன் அந்த மாணவர் மாயமானார். அந்த இரு மாணவர்களும், மது போதைக்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது. மூன்று மாணவர்களின் பெற்றோர் புகாரின்படி, பாலக்கரை போலீசார், அந்த மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பத்தாம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவர்கள், மதுபோதைக்கு அடிமையாகி, வீட்டை விட்டு வெளியேறியது, சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us