sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

தந்தையின் ரூ.50 லட்சம் அள்ளி சென்ற மகள்கள்

/

தந்தையின் ரூ.50 லட்சம் அள்ளி சென்ற மகள்கள்

தந்தையின் ரூ.50 லட்சம் அள்ளி சென்ற மகள்கள்

தந்தையின் ரூ.50 லட்சம் அள்ளி சென்ற மகள்கள்


ADDED : ஜன 25, 2025 01:58 AM

Google News

ADDED : ஜன 25, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:தந்தையுடன் ஏற்பட்ட சொத்து பிரச்னையில், அவரது வீட்டில் இருந்து, 50 லட்சம் ரூபாய் மற்றும் சொத்து பத்திரங்களை எடுத்துச் சென்ற இரு மகள்கள், அவர்களின் கணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சி, காந்தி மார்க்கெட், தையல்கார தெருவைச் சேர்ந்தவர் சதாசிவம், 85. இவருக்கு கல்பனா, பிரியா என, திருமணமான இரு மகள்கள் உள்ளனர். சதாசிவத்தின் சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக, குடும்பத்தில் பிரச்னை இருந்தது.

சில நாட்களாக கல்பனா தன் கணவர் பொற்செழியன், பிரியா தன் கணவர் சித்தா யோகமன்னன் ஆகியோருடன், தந்தையுடன் வீட்டில் வைத்து பேசி வந்தனர்.

இந்நிலையில், சதாசிவம் காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரில், தன் வீட்டில் வைத்திருந்த, 50 லட்சம் ரூபாய் மற்றும் சொத்து பத்திரங்களை, மகள்கள் கல்பனா, பிரியா இருவரும், தங்கள் கணவர்களின் உதவியுடன் எடுத்துச் சென்று விட்டனர். அவற்றை மீட்டுத்தர வேண்டும் என, கூறியுள்ளார்.

காந்தி மார்க்கெட் குற்றப் பிரிவு போலீசார், அந்த முதியவரின் மகள்கள் மற்றும் மருமகன்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us