sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

என்மீது போலி ஆவணத்துடன் புகார்! நில அபகரிப்பு புகாரில் முதியவர் மனு

/

என்மீது போலி ஆவணத்துடன் புகார்! நில அபகரிப்பு புகாரில் முதியவர் மனு

என்மீது போலி ஆவணத்துடன் புகார்! நில அபகரிப்பு புகாரில் முதியவர் மனு

என்மீது போலி ஆவணத்துடன் புகார்! நில அபகரிப்பு புகாரில் முதியவர் மனு


ADDED : ஆக 06, 2011 02:25 AM

Google News

ADDED : ஆக 06, 2011 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: 'என்மீது போலியான ஆவணங்களைக் கொண்டு புகார் கொடுக்கப்பட்டுள்ளது' என்று 60 லட்சம் ரூபாய் நிலமோசடி புகார் கூறப்பட்டவர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தார்.

திருச்சி பொன்மலைப்பட்டி காந்திதெருவைச் சேர்ந்தவர் அடைக்கலசாமி (71). இவர் மீது நவலூர் குட்டப்பட்டுவைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்ற காங்கிரஸ் பிரமுகர் கடந்த சில நாட்களுக்கு முன் 60 லட்சம் ரூபாய் நில அபகரிப்பு புகார் ஒன்றை கூறியிருந்தார். அதில், 'அடைக்கலசாமி போலி பத்திரம் மூலம் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்து, கொலை மிரட்டல் விடுத்தார்' என்று ஆனந்தராஜ் கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து அடைக்கலசாமி நேற்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்துவிடம் மனு அளித்தார். அதில், பொன்மலைப்பட்டி ஆலத்தூர் கிராமத்தில் 77 சென்ட் நிலம் எனது மூதாதையர் காலத்திலிருந்தே எங்களிடம் உள்ளது. கடந்த 1927ம் ஆண்டு முதலே எங்களிடம் அதற்கான ஆவணங்கள் உள்ளது. பொன்மலைப்பட்டி மரிய ஆரோக்கியராஜ் என்பவர் போலியாக பட்டா தயாரித்து என் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றது குறித்த வழக்கு, திருச்சி முன்சீப் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இச்சூழலில் மரிய ஆரோக்கியராஜ் பவர் பத்திரம் மூலம் ஆனந்தராஜ் என்பவருக்கு நிலத்தை கொடுத்துள்ளார். அவர்தான் என்மீது போலியாக கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கூறியுள்ளார். நேற்று முன்தினம் மாலை ஐந்து மணியளவில் மரிய ஆரோக்கியராஜ், காங்கிரஸ் பிரமுகர் ஆனந்தராஜ் ஆகியோர் 10க்கும் மேற்பட்ட அடியாட்கள், பயங்கர ஆயுதங்களுடன் எனது வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் இடத்தை காலி செய்யுமாறும் கூறினர்.மேற்படி நிலம், என்னுடையது என்பதற்கான ஆவணங்களை இத்துடன் இணைத்துள்ளேன். போலி பட்டா தயாரித்து என்னுடைய நிலத்தை ஆக்கிரமிக்க முயல்வதோடு, எனக்கு கொலை மிரட்டலும் விடுத்த மரிய ஆரோக்கியராஜ் மற்றும் ஆனந்தராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us