sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

முறைகேடாக ரூ.100 கோடிக்கு சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

/

முறைகேடாக ரூ.100 கோடிக்கு சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

முறைகேடாக ரூ.100 கோடிக்கு சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

முறைகேடாக ரூ.100 கோடிக்கு சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

17


UPDATED : ஏப் 25, 2024 04:44 PM

ADDED : ஏப் 25, 2024 04:37 PM

Google News

UPDATED : ஏப் 25, 2024 04:44 PM ADDED : ஏப் 25, 2024 04:37 PM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே, பில்லாதுறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 79. இவர், 1989 - 1993ம் ஆண்டு காலக்கட்டத்தில், துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் சார்பதிவாளராக பொறுப்பு வகித்துள்ளார். இந்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சட்ட விரோதமான வகையில் அவரது பெயரிலும், அவரது மனைவி வசந்தி, 65, என்பவர் பெயரிலும் 32 லட்சத்து, 25 ஆயிரத்து 532 ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கியுள்ளார்.

ஜானகிராமன் பெயரிலும், அவரது மனைவி வசந்தி பெயரிலும் வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் வாங்கிய சொத்தின் தற்போதைய மதிப்பு மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2001ம் ஆண்டு ஆக.,17ல் அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பிகாபதி, அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.

வழக்கின் புலன் விசாரணை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணையில் இருந்து வந்த வழக்கின் தொடர் விசாரணையை தற்போதைய டி.எஸ்.பி., மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சேவியர்ராணி, எஸ்.ஐ., பாஸ்கர் மற்றும் சிறப்பு அரசு வக்கீல் சுரேஷ்குமார் ஆகியோரால் நடத்தப்பட்டது.

திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரித்தார். விசாரணை முடிவில், முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும், வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்து, அரசுக்கு ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us