/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு மருந்து சேர்ப்பு: அவதுாறு பரப்பிய சினிமா இயக்குனர் கைது
/
பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு மருந்து சேர்ப்பு: அவதுாறு பரப்பிய சினிமா இயக்குனர் கைது
பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு மருந்து சேர்ப்பு: அவதுாறு பரப்பிய சினிமா இயக்குனர் கைது
பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு மருந்து சேர்ப்பு: அவதுாறு பரப்பிய சினிமா இயக்குனர் கைது
UPDATED : செப் 25, 2024 04:58 AM
ADDED : செப் 24, 2024 07:35 PM

திருச்சி:பழனி பஞ்சாமிர்தத்தில், ஆண்மை குறைவு மருந்து கலப்பதாக கூறி, அவதுாறு பரப்பியதாக, சினிமா பட இயக்குனர் மோகனை, திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் ஆகிய சினிமா படங்களை இயக்கிய மோகன், தனியார் 'டிவி' சேனலுக்கு, ஹிந்துக்கள் இளிச்சவாயர்களா என்ற தலைப்பில் அளித்த பேட்டி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பேட்டியளித்த அவர், 'பழனி கோவில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தில், ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் மாத்திரை கலக்கப்பட்டதாகவும், அதை வெளியே தெரியாமல் அழித்து விட்டதாகவும், அங்கு பணி செய்தவர்கள் தெரிவித்தனர்' என்றார்.
அவரது கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதுாறு பரப்பியதாக, திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் மேலாளர் கவியரசு அளித்த புகார்படி, சமயபுரம் போலீசார், ஐந்து பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பழநி உள்ளிட்ட பல பகுதிகளிலும், இதே பிரச்னைக்காக மோகன் மீது போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார் உத்தரவின்படி, சென்னை, ராயபுரத்தில் தங்கி இருந்த இயக்குனர் மோகனை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.