sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

புத்தாநத்தத்தில் முருகனுக்கு ஞானரத ஊர்வலம் விமரிசை

/

புத்தாநத்தத்தில் முருகனுக்கு ஞானரத ஊர்வலம் விமரிசை

புத்தாநத்தத்தில் முருகனுக்கு ஞானரத ஊர்வலம் விமரிசை

புத்தாநத்தத்தில் முருகனுக்கு ஞானரத ஊர்வலம் விமரிசை


ADDED : ஜன 15, 2025 11:54 PM

Google News

ADDED : ஜன 15, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தில், ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று முருகன் ஞானரத ஊர்வலம் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று புத்தாநத்தத்தில் ஞானரத ஊர்வலத்துக்கு, ஹிந்து அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.

இதையடுத்து, நேற்று மதியம் பாறைப்பட்டி மாலைக்காட்டுப்பட்டி சந்திப்பில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன் சிலை வைத்து, ஞானரத ஊர்வலம் புறப்பட்டது.

ஊர்வலத்தை வி.ஹெச்.பி., மாநில நிர்வாகி என்.ஆர்.என்.பாண்டியன் துவக்கி வைத்தார்.

தாரை, தப்பட்டைகள் முழங்க, புத்தாநத்தம் கடைவீதி உட்பட, முக்கிய வீதிகள் வழியாக சென்று, இடையப்பட்டி வழியாக வடக்கு இடையப்பட்டியில் உள்ள ஞானமலையை சென்றடைந்தது.

அங்கு ஞானவேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதில், ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக, மத்திய மண்டல ஐ.ஜி., நிர்மல்குமார் ஜோஷி தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us