ADDED : நவ 09, 2024 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்துார் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள், 80. இவரது மகன் கோவிந்தராஜ், திருச்சி கலெக்டர் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை கண்ணம்மாள், அவரது மகன் டூ - -வீலரில் சத்திரம் நோக்கி சென்றனர். பகல், 11:30 மணிக்கு, மேலப்புதுார் சாலையில் சென்ற போது, ஜங்ஷனில் இருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்ட் சென்ற தனியார் பஸ் திடீரென டூ- - வீலர் பின்பக்கம் மோதியது.
இதில், கோவிந்தராஜ்,கண்ணம்மா நிலைத்தடுமாறி சாலையில் விழுந்ததில், பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கிய கண்ணம்மாள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.