ADDED : பிப் 04, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரை சேர்ந்தவர் பிரபாகரன், 40; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் இரவு, வேங்கூரில் உள்ள காட்டுப்பகுதியில், உடல் முழுதும் வெட்டுப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
வேங்கூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம், பிரபாகரன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும், அந்த பிரச்னையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.