sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

பா.ஜ., பெண் பிரமுகர் வீட்டில் அடைத்து வைத்தவர் மீட்பு

/

பா.ஜ., பெண் பிரமுகர் வீட்டில் அடைத்து வைத்தவர் மீட்பு

பா.ஜ., பெண் பிரமுகர் வீட்டில் அடைத்து வைத்தவர் மீட்பு

பா.ஜ., பெண் பிரமுகர் வீட்டில் அடைத்து வைத்தவர் மீட்பு


ADDED : பிப் 15, 2024 02:50 AM

Google News

ADDED : பிப் 15, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி, அரியமங்கலம், விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் மதியழகன், 55. சினிமா துணை நடிகரான அவரது மனைவி மாலதி, 46. அவர், ஏ.பி., நகரை சேர்ந்த பா.ஜ., பிரமுகரான உமாராணி, 55, என்பவரிடம், 6 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பித் தராததால், உமாராணி வீட்டில், மாலதியை இரண்டு மாதமாக தனியறையில் அடைத்து வைத்து, கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, மதியழகன் மற்றும் உறவினர்கள், காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உமாராணியின் வீட்டிற்கு சென்ற போலீசார், அங்கு தனியறையில் அடைக்கப்பட்டிருந்த மாலதியை மீட்டனர்.

தொடர்ந்து உமாராணியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, 'மாலதி பலரிடம் கடன் வாங்கி உள்ளார். கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்ததால், அவரை காப்பாற்றவே என் வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்திருந்தேன்' என்றார்.

போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us