sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

தவறவிட்ட சூட்கேசில் ரூ.10 லட்சம் தங்கம், வைரம்

/

தவறவிட்ட சூட்கேசில் ரூ.10 லட்சம் தங்கம், வைரம்

தவறவிட்ட சூட்கேசில் ரூ.10 லட்சம் தங்கம், வைரம்

தவறவிட்ட சூட்கேசில் ரூ.10 லட்சம் தங்கம், வைரம்


ADDED : பிப் 01, 2025 01:53 AM

Google News

ADDED : பிப் 01, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:இரு ரயில் பயணியர் சூட்கேசை மாற்றி எடுத்துச் சென்ற சம்பவத்தில், ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டதால், 10 லட்சம் ரூபாய் மதிப்பு தங்க, வைர நகைகள் உரியவருக்கு கிடைத்தது.

சென்னையில் இருந்து திருச்சிக்கு, ஜன., 29ல் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி காசிநாதன் பயணித்தார். அவர், திருச்சி ரயில் நிலையத்தில் இறங்க முயன்றபோது, தன் சூட்கேசை யாரோ மாற்றி எடுத்துச் சென்றது தெரிந்தது.

அவர் திருச்சி ரயில்வே போலீசில் புகார் அளித்தார். துரிதமாக செயல்பட்ட போலீசார், காசிநாதன் வந்த ரயில் பெட்டியில் பயணம் செய்தவர்கள் பட்டியலை எடுத்து, ஒவ்வொருவராக தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

இதில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ராஜகோபால், சூட்கேசை மாற்றி எடுத்துச் சென்றது தெரிந்தது. அவரை நேரில் வரவழைத்த போலீசார், இரு சூட்கேஸ்களையும் திறந்து, யாருடையது என உறுதி செய்தனர்.

பின், அவரவர் சூட்கேஸ்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இதில், ராஜகோபால் சூட்கேசில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், பட்டுப்புடவைகள் இருந்தன. அவற்றை நேர்மையாக ஒப்படைத்த காசிநாதனை, ரயில்வே போலீசார் பாராட்டினர். துரித நடவடிக்கை எடுத்த ரயில்வே போலீசாரையும் அனைவரும் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us