sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

நிதி நிறுவன அதிகாரி வீட்டில் ரூ.59 லட்சம் நகை திருட்டு

/

நிதி நிறுவன அதிகாரி வீட்டில் ரூ.59 லட்சம் நகை திருட்டு

நிதி நிறுவன அதிகாரி வீட்டில் ரூ.59 லட்சம் நகை திருட்டு

நிதி நிறுவன அதிகாரி வீட்டில் ரூ.59 லட்சம் நகை திருட்டு


ADDED : அக் 20, 2025 12:19 AM

Google News

ADDED : அக் 20, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: நிதி நிறுவன அதிகாரி வீட்டின் கதவை உடைத்து, 59 லட்சம் ரூபாய் மதிப்பு நகைகளை திருடியவர்களை போலீசார் தேடுகின்றனர்.

திருச்சி, சிம்கோ மீட்டர் பகுதியில் வசிப்பவர் சாமிநாதன், 50; ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவன அதிகாரி.

இவரும், இவரது மனைவியும், சொந்த ஊரான நாகை மாவட்டம், பூவத்தக்குடிக்கு மூன்று நாட்களுக்கு முன் சென்றனர்.

இவரது வீட்டின் மாடியில் குடியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவர், நேற்று முன்தினம் காலையில் பார்த்தபோது, சாமிநாதன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந் தது. இது குறித்து அவருக்கு தகவல் கூறினார்.

சாமிநாதன் வந்து பார்த்த போது, 65 சவரன் நகைகளில், 59 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தன. ஆறு சவரன் நெக்லஸ் மட்டும் அங்கேயே இருந்தது. கே.கே.நகர் போலீசார், திருடர்களை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us