sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொன்ற மகன்

/

இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொன்ற மகன்

இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொன்ற மகன்

இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொன்ற மகன்


ADDED : செப் 24, 2025 11:12 PM

Google News

ADDED : செப் 24, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:மது போதையில் தகராறு செய்த தந்தையை அடித்துக் கொன்ற மகனை, போலீசார் கைது செய்தனர்.

துறையூர் அருகே, இரும்புக் கம்பியால், தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவன், 46.

இவருக்கு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். மகன் ராஜகுரு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ஜீவன், அடிக்கடி மது போதையில் வீட்டுக்கு வந்து, தகராறு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, மது போதையில் இருந்த தந்தை, மகனுடன் வாக்குவாதம் செய்தார். தந்தை அடித்ததால் ஆத்திரமடைந்த மகன் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் தாக்கியதில், ஜீவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ஜம்புநாதபுரம் போலீசார் நேற்று, ராஜகுருவை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us