sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

லாரி மீது பஸ் மோதல் 5 பேர் படுகாயம்

/

லாரி மீது பஸ் மோதல் 5 பேர் படுகாயம்

லாரி மீது பஸ் மோதல் 5 பேர் படுகாயம்

லாரி மீது பஸ் மோதல் 5 பேர் படுகாயம்


ADDED : ஆக 23, 2011 01:13 AM

Google News

ADDED : ஆக 23, 2011 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே யானைக்கல் என்னுமிடத்தில் முன்னால் சென்ற லாரியை, டிராவல்ஸ் பஸ் கடக்க முயன்றபோது, லாரியின் மீது பஸ் மோதியதில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யானைக்கல் என்னுமிடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை நான்கு மணியளவில் திருச்சியிலிருந்து லாரி மதுரை சென்றது. சென்னையிலிருந்து மதுரை சென்ற சிட்டி எக்ஸ்பிரஸ் டிராவல்ஸ் பஸ் லாரியை முந்தி செல்ல முயன்றபோது, லாரியின் மீது டிராவல்ஸ் பஸ் மோதிவிட்டது. இதில், டிராவல்ஸ் பஸ்ஸில் பயணம் செய்த சேடப்பட்டி சித்ரன் மகன் மாதவன்(28), தஞ்சாவூர் அஸ்ரப் அலி மகள் பத்ரியா(18), மதுரை தனபால் மகன் ஸ்ரீதர்(33), திருவெல்வேலி செல்லத்துரை மகன் கோதண்டராமன்(29), விருதுநகர் தேவராஜ் மகன் விஜய்(29) ஆகிய ஐந்து பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். மாதவன், ஸ்ரீதர், கோதண்டராமன் ஆகிய மூவரும் திருச்சி கீதாஞ்சலி மருத்துவமனையிலும், விஜய் திருச்சி அரசு மருத்துவமனையிலும், பத்ரியா தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். துவரங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுருளியாண்டி, வளநாடு போலீஸ் எஸ்.எஸ்.ஐ., பால்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்த, இந்த விபத்திற்கு காரணமான சிட்டி எக்ஸ்பிரஸ் டிராவல்ஸ் பஸ் டிரைவர் உதயகுமார்(52) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us