sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

திருச்சியில் அரசு பஸ் மோதி சத்துணவு கண்காணிப்பாளர் சாவு

/

திருச்சியில் அரசு பஸ் மோதி சத்துணவு கண்காணிப்பாளர் சாவு

திருச்சியில் அரசு பஸ் மோதி சத்துணவு கண்காணிப்பாளர் சாவு

திருச்சியில் அரசு பஸ் மோதி சத்துணவு கண்காணிப்பாளர் சாவு


ADDED : ஆக 21, 2011 02:11 AM

Google News

ADDED : ஆக 21, 2011 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சியில் அரசு பஸ் மோதியதில் டூவீலரில் சென்ற சத்துணவு கண்காணிப்பாளர் பரிதாபமாக பலியானார்.

திருச்சி, நவல்பட்டு, அண்ணாநகரை சேர்ந்தவர் செல்லப்பா (42). இவர், மணிகண்டம் யூனியன் அலுவலகத்தில் சத்துணவு பிரிவு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று பணியை முடித்துக் கொண்டு மதியம் 12 மணியளவில் டி.வி.எஸ்., எக்ஸல் டூவீலரில் வீட்டுக்கு புறப்பட்டார். திருச்சி குட்ஷெட் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தார்.



முடுக்குப்பட்டி அருகே செல்லும்போது, திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிலிருந்து அறந்தாங்கி சென்ற அரசு பஸ் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பஸ் பின்சக்கரம் ஏறி மூளை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மாநகர தெ ற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர். விபத்து ஏற்படுத்திய அரசு பஸ்ஸை டி.வி.எஸ்., டோல்கேட் அருகே போலீஸார் மடக்கி பிடித்தனர். பஸ் அருகே உள்ள அரசு போக்குவரத்துக்கழக டெப்போவுக்குள் நிறுத்தப்பட்டது. இவ்விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.








      Dinamalar
      Follow us