sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

திருச்சி அருகே கோர விபத்துபலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

/

திருச்சி அருகே கோர விபத்துபலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

திருச்சி அருகே கோர விபத்துபலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

திருச்சி அருகே கோர விபத்துபலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு


ADDED : செப் 08, 2011 12:05 AM

Google News

ADDED : செப் 08, 2011 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே ஆம்னி பஸ்-அரசு பஸ் மோதிக்கொண்ட கோரவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

திருச்சி- மதுரை பைபாஸ் ரோட்டில் துவரங்குறிச்சி அருகே லஞ்சமேடு கைகாட்டி என்ற இடத்தின் கடந்த ஐந்தாம் தேதி ஆம்னி பஸ்ஸூம், அரசு பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில், மூன்று குழந்தைகள் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.விபத்தில், 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருச்சி, மணப்பாறை அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற் தொட்டியப்பட்டியைச் சேர்ந்த நாகலட்சுமி (35) பரிதாபமாக உயிரிழந்தார்.இந்நிலையில், திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொட்டியப்பட்டி அழகர் மனைவி ராஜம்மாள் (45) நேற்று காலை ஐந்து மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். இதன்மூலம் பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.






      Dinamalar
      Follow us