sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

வேகத்தடையில் சென்ற பஸ்ஸிலிருந்து ரோட்டில் வீசப்பட்ட பெண் பலி

/

வேகத்தடையில் சென்ற பஸ்ஸிலிருந்து ரோட்டில் வீசப்பட்ட பெண் பலி

வேகத்தடையில் சென்ற பஸ்ஸிலிருந்து ரோட்டில் வீசப்பட்ட பெண் பலி

வேகத்தடையில் சென்ற பஸ்ஸிலிருந்து ரோட்டில் வீசப்பட்ட பெண் பலி


ADDED : செப் 20, 2011 11:39 PM

Google News

ADDED : செப் 20, 2011 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துறையூர்: துறையூர் அருகே வேகத்தடையில் பஸ் ஏறி, இறங்கிய அதிர்ச்சியில் பஸ்ஸிலிருந்து சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.

உப்பிலியபுரம், எல்லையோடும் வீதியை சேர்ந்த வடகிரி மனைவி குமாரத்தி (52). இவர் தினமும் துறையூருக்கு பஸ்ஸில் சென்று, காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு விக்னேஷ் என்ற பஸ்ஸில் உப்பிலியபுரத்திலிருந்து துறையூருக்கு புறப்பட்டார். பஸ் வெங்கடாசலபுரம் அருகே சென்றபோது, சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறி, இறங்கும் போது ஏற்பட்ட அதிர்ச்சியில் குமாரத்தி, நிலைகுலைந்து சாலையில் விழுந்தார். இதில், தலையில் அடிபட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். உப்பிலியபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தில், பெருமாள்பாளையத்தை சேர்ந்த பஸ் டிரைவர் பெரியசாமி (33) கைது செய்யப்பட்டார்.








      Dinamalar
      Follow us