/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வனப்பகுதி அடிவாரத்தில் யானை அட்டகாசம்; விவசாயிகள் புகார்
/
வனப்பகுதி அடிவாரத்தில் யானை அட்டகாசம்; விவசாயிகள் புகார்
வனப்பகுதி அடிவாரத்தில் யானை அட்டகாசம்; விவசாயிகள் புகார்
வனப்பகுதி அடிவாரத்தில் யானை அட்டகாசம்; விவசாயிகள் புகார்
ADDED : ஜூலை 28, 2024 04:23 AM
அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஈசப்பாறை, மலைக்கருப்புச்-சாமி கோவில் வனப்பகுதி அடிவாரத்தில், ஒரு வாரமாக, வனப்ப-குதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை, விவசாய தோட்டங்களில் இரவு நேரங்களில் புகுந்து, பயிர்களை சேதப்ப-டுத்தி வருகிறது. பட்டாசு வெடித்து யானையை விரட்டினாலும், அந்தப் பகுதியிலேயே சுற்றித்திரிகிறது.
அந்தியூர் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி சென்றால், அடுத்த நாள் மீண்டும் வந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இது
இகுறித்து அந்தியூர் வனத்துறையினர் கூறியதாவது: இந்த கால-கட்டத்தில் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வராது. ஆனால், உணவு தேவைக்காக இந்த யானை வெளியே வரத்து-வங்கியுள்ளது.
மக்களுக்கும், விவசாய தோட்டத்திற்கும் இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக யானையை விரட்டி வருகிறோம்.
இவ்வாறு கூறினர்.