/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
'மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு தற்கொலைக்கு சமம்'
/
'மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு தற்கொலைக்கு சமம்'
'மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு தற்கொலைக்கு சமம்'
'மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு தற்கொலைக்கு சமம்'
ADDED : ஆக 03, 2024 01:04 AM
வேலுார், 'மேகதாது அணை விவகாரம் குறித்து, கர்நாடக துணை முதல்வர், பிரதமர் மோடியை சந்தித்த போது, தமிழகத்துடன் பேசி தீர்த்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அவ்வாறு நாம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இயலாது, அதை ஏற்று கொண்டால், நாம் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில், ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழாவை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். கலெக்டர் சுப்புலெட்சுமி உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவும், தமிழகமும் மேகதாது அணை விவகாரத்தில் இதுவரை, 38 முறை பேசியும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. பிரதமராக தேவுகவுடா இருந்தபோது, கர்நாடக முதல்வர் பட்டேலும், தமிழக முதல்வர் கருணாநிதியும் பேசியும் அப்போதே தீர்க்கப்படவில்லை. வி.பி.சிங், பிரதமராக இருந்தகாலத்தில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. பின்னர் தமிழகம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர், பிரதமர் மோடியை சந்தித்தபோது, தமிழகத்துடன் பேசி தீர்த்து கெள்ளுங்கள் என கூறியுள்ளார். ஆனால், பேசினால் தீர்வு கிடைக்காது. பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்பது, நாம் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, மார்கண்டேயன் அணை கட்டுகிறார்கள். அதற்கு நாம் நடுவர் மன்றம் கேட்டோம். ஆனால், அவர்கள் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் பேசவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.