ADDED : ஆக 02, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்:வேலுார் அருகே, தனியார் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து, 10 பவுன் நகை மற்றும் 1.35 லட்சம் ரூபாய் திருட்டு போனது.
வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டை சேர்ந்தவர் அசோக்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த, 28ல் திருத்தணி முருகர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு நேற்று காலை, வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டினுள் பீரோவை உடைத்து அதிலிருந்த, 10 சவரன் நகை, 1.35 லட்சம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. பேரணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.